பொறியியல் கல்லூரி: அண்ணா பல்கலைகழத்துக்கு தடை
சென்னை:
தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம்கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சில தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ரத்துசெய்தும், பல்கலைக்கழகத்துடனான அவற்றின் இணைப்பைத் துண்டித்தும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில்உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இக் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அண்ணாபல்கலைக்கழக நடவடிக்கைக்குத் தடை விதித்தது.
மேலும், தனியார் கல்லூரிகள் மீது தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது தவறானது.அடிப்படை வசதிகள் உள்ளிட்ட புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை, தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றுநீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து 3 வாரத்திற்குள் ஆய்வு செய்து,நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.