சிலி நாட்டுக்கு இந்திய ஹெலிகாப்டர்கள்
டெல்லி:
சிலி நாட்டு ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
தனது ராணுவத்துக்கு 12 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் சிலிநாடு பேச்சு நடத்தி வருகிறது.
இதையடுத்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர்களைசிலிக்குக் கொண்டு சென்று அதன் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந் நாட்டு ராணுவ அதிகாரிகள்முன்னிலையில் செய்முறை விளக்கம் தந்தது இந்திய விமானப் படை.
இந் நிலையில் இது குறித்து மேல்மட்ட பேச்சு நடத்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர்மார்ஷெல் கிருஷ்ணசாமிதலைமையிலான குழு இன்றிரவு சிலி செல்கிறது.
ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் நேபாளத்துக்கு இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா விற்பனை செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலுடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை உலகளவில் விற்பனை செய்யவும்இந்தியா முயன்று வருகிறது.