ராகிங்: 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து ராகிங் செய்த 2 மாணவர்கள்வெளியேற்றப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கிப்படிக்கின்றனர்.
இந்த விடுதியில் தங்கி இருந்து படிக்கும் 5-ம் ஆண்டு மாணவர்களான அருண் விஜயன், சீனிவாசன் இருவரும்தங்களுக்கு வணக்கம் செலுத்தவில்லை என்பதால் ஷ்யாம்குமார் (2-ம் ஆண்டு), வசந்த், சேது மாதவன் (3ம் ஆண்டு)ஆகிய மாணவர்களை அடித்து மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மூவரும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதாவிடம் புகார் தெரிவித்தனர்.விசாரணையில் சீனியர் மாணவர்கள் 2 பேரும் ஜூனியர் மாணவர்களை அடித்ததும், தங்களுக்கு மரியாதைசெலுத்த சொல்லி மிரட்டியதும் உண்மை என்று உறுதியானது.
இதையடுத்து அருண் விஜயன், சீனிவாசன் ஆகிய இருவரையும் உடனடியாக கல்லூரி விடுதியைவிட்டுவெளியேற ஹேமலதா உத்தரவிட்டார். இதையடுத்து 2 மாணவர்களும் கல்லூரி விடுதியில் இருந்துவெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications