For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசிடி: போலீஸ தொந்தரவுக்கு நீதிமன்றம் தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முறையாக உரிமம் பெற்று சினிமா விசிடிக்களை விற்போரை காவல்துறையினர் எந்தவிதத்திலும் துன்புறுத்தவோ,தொந்தரவு செய்யவோக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரகுபதி என்பவர் உள்ளிட்ட சிலர் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,தாங்கள் உரிமம் பெற்ற விசிடிக்களை விற்பனை செய்து வருகிறோம். திருட்டு விசிடிக்களைப் பிடிக்கிறோம் என்றபோர்வையில் போலீஸார் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர்.

உரிமம் பெற்று விசிடிக்களை விற்பனை செய்து வரும் தங்களுக்கு போலீஸார் தொந்தரவு கொடுப்பதற்குத் தடைவிதிக்கக் கோரியிருந்தனர்.

இந்த மனுவை இன்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரித்தார். பின்னர், முறையான உரிமம் பெற்று விசிடிக்களைவிற்று வருவோரை காவல்துறையினர் அச்சுறுத்தவோ, சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யவோ கூடாது.

புகார் வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட விசிடி விற்பனை கடையில் சோதனை நடத்த வேண்டும், நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

திருட்டு விசிடி தொடர்பான காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு விசிடி விற்பனையாளர்கள் ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X