For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் ஆவணங்கள் திரட்டிய ஜெயலட்சுமி

By Super
Google Oneindia Tamil News

கோவை:

Jayalakshmi

கோவையில் ஜெயலட்சுமி
போலீஸாருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஜெயலட்சுமி கோவை சென்றார்.

ஜெயலட்சுமி வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

முன்பு ஆம்வேயின் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தான் பல காக்கிச் சட்டைகள்ஜெயலட்சுமியின் வலையில் விழுந்தன. இந்தத் திட்டத்தில் சேருவதற்காக சில ஆயிரங்களை ஜெயலட்சுமிக்குவழங்கிய கையோடு அவரை தங்கள் உடல் இச்சைக்கும், உயர் அதிகாரிகள், முக்கியஸ்தர்களுக்குப் பரிமாறவும்பயன்படுத்திக் கொண்டனர்.

ஜெயலட்சுமிக்காக, உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுப்படி ஆம்வே செயின் மார்க்கெட்டிங்கில் ஏராளமானபோலீஸார் சேர்ந்துள்ளனர். இப்போது இது தொடர்பான ஆதாரங்களை எல்லாம் ஜெயலட்சுமி திரட்டஆரம்பித்துள்ளார்.

இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் கோவை வந்தார் ஜெயலட்சுமி. திருச்சி சாலையில் உள்ள ஆம்வேநிறுவனத்திற்கு சென்று தன் மூலம் சேர்த்து விடப்பட்ட போலீஸாரின் பட்டியலை கேட்டுப் பெற்றார்.

அதே போல மேலும் 3 தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கும் சென்ற ஜெயலட்சுமி அங்கு தன் மூலமாகபிஸினசில் சேர்த்துவிடப்பட்ட போலீசாரின் பட்டியலைக் கேட்டார். ஆனால், உடனடியாகப் பட்டியலைத் தரமறுத்துவிட்ட அந்த நிறுவனங்கள், தங்களது வழக்கறிஞர்களுடன் பேசிவிட்டுத் தருவாகக் கூறிவிட்டனர்.

ஜெயலட்சுமியுடன் அவருடன் வழக்கறிஞர் அழகர்சாமியும் வந்திருந்தார். அவரது பாதுகாப்புக்காக பெண்சப்-இன்ஸ்பெக்டரும், பெண் ஏட்டு ஒருவரும் உடன் வந்திருந்தனர். ஜெயலட்சுமி சென்ற இடத்தில் எல்லாம்அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான பொது மக்கள் கூடியதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்துவதற்காக பெண் சிபிஐ அதிகாரி ஒருவர் ஓரிரு நாட்களில்மதுரை வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர 4 இன்ஸ்பெக்டர்களைக் கொண்ட சிபிஐயின் ஒரு குழு மதுரையில் தீவிர விசாரணையைதொடங்கியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X