மத்திய சிறை கைதிகளுக்கு குடிக்க கூவம் நீர்!
சென்னை:
சென்னை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கூவம் கழிவு நீரை குடிப்பதற்குக் கொடுப்பதாக எழுந்துள்ளபுகாரையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று சிறையில் வழங்கப்படும் நீரை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.
சென்னை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிறைக்கு அருகே ஓடும் சாக்கடையான கூவத்தில் இருந்து நீரைஎடுத்து அதைத் தான் குடிக்கத் தந்து வருகின்றனர் போலீசார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சிவக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறையில் வினியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய சென்னைமாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி கிருஷ்ணன் தலைமையிலான 10 பேர் கொண்டகுழு இன்று மத்திய சிறைக்கு சென்று அங்கு குடிநீரை சாம்பிள்களை எடுத்தனர்.
இந்த சாம்பிள்கள் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் சோதனையிடப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications