புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஆபாச படங்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை இழைக்கப்படுவதாக எழுந்துள்ளபுகாரையடுத்து புதுவை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விடுதி அறைகளில் ஒட்டப்பட்டிருந்தஆபாசப் படங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பெண்கள், சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தில் கொடுத்த புகாரில்,அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பெண்களது அறைகளில்அசிங்கமான காயங்கள் நடைபெறுவதாகவும், ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்படுவதாகவும்கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரிக்குமாறு புதுவை மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் பூர்ணிமாஅத்வானி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து புதுவை மகளிர் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரமத்தில்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந் நிலையில் புதுவை போலீஸாரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். அருணாஸ்ரீ பிரசாத் என்பவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில் புதுவை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு ஆசிரமத்திற்குச் சென்ற போலீஸார் அங்குள்ள நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அத்தோடு,புகார் கொடுத்த அருணாஸ்ரீ, அவரது சகோதரிகள் நான்கு பேர் மற்றும் ஆசிரமத்தில் தங்கியுள்ள மற்றபெண்களிடம் விசாரணை நடந்தது.

பின்னர் பெண்கள் தங்கியுள்ள அறைகளை போலீஸார் சுற்றிப் பார்த்தனர். அப்போது பல அறைகளின் சுவர்களில்ஆபாச படங்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும்வீடியோவிலும் படமாக்கப்பட்டன.

இதற்கிடையே, அரவிந்தர் ஆசிரம செக்ஸ் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுபுதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+