அறிவியல் கண்காட்சியில் வெடித்த எரிமலை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

சேலம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சாண எரிவாயு கலன் வெடித்து ஒரு மாணவன் பலியானதைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தஎரிமலை வெடித்து 4 மாணவிகள் காயமடைந்தனர்.

தஞ்சை மாவட்ட கல்வித்துறை சார்பில், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் அறிவியல்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கிட்டப்பா பள்ளியைச் சேர்ந்த சசிகலா, காயத்ரி,பானுப்பிரியா, ரோசலின் ஆகிய நான்கு மாணவிகளும் சேர்ந்து எரிமலையை உருவாக்கியிருந்தனர்.

களிமண்ணால் செய்யப்பட்டிருந்த எரிமலைக்கு உள்ளே வெடிபொருட்களை வைத்து மாணவிகள் எரிமலையைஉருவாக்கியிருந்தனர். வெடிபொருட்களை பற்ற வைத்து எரிமலையை பரிசோதிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக எரிமலை வெளிப்புறமாக வெடித்துச் சிதறியது.

இதில் சசிகலா உள்ளிட்ட 4 மாணவிகளும் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குஅவர்களை ஆசிரியர்களும், சக மாணவிகளும் எடுத்துச் சென்றனர். அங்கு சசிகலாவின் கண்ணில் இரும்புத்துகள்கள் ஊடுறுவியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

சமீபத்தில் சேலம் பள்ளியில் சாண எரிவாயு கொள்கலனை காட்சிக்கு வைத்திருந்தபோது அது வெடித்துச் சிதறி ஒருமாணவன் பரிதாபமாக பலியானது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+