விசிடி கடைகள் மூடல்: வியாபாரிகள் போராட்டம்
சென்னை:
உரிமம் பெறப்பட்ட பழைய படங்களின் விசிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்வதைக் கண்டித்து சென்னைபர்மா பஜார் வியாபாரிகள் கடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள பர்மா பஜார் விசிடிக்களுக்கு பெயர் போனது. இங்கிருந்துதான் தமிழ்ப்படங்களின் திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு விடப்படுவதாக திரையுலகினர் புகார் கூறி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை முதல் பர்மா பஜார் வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷாகுல் அமீது கூறுகையில்,
திருட்டு விசிடி ஒழிப்பு என்ற பெயரில் பழைய படங்களின் விசிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்கிறார்கள்.அப்பாவி இளைஞர்களை திருட்டு விசிடி தயாரித்ததாகக் கூறி கைது செய்து வழக்குப் போட்டு அவர்களதுஎதிர்காலத்தை பாழடிக்கின்றனர்.
புதிய படங்களின் விசிடிக்களை விற்றால் அவர்கள் மீது போலீஸார் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால்பழைய படங்களின் உரிமம் பெற்ற விசிடிக்களை பறிதல் செய்வதை போலீஸார் உடனே நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் தற்போது பர்மா பஜார் அளவில் தொடங்கியுள்ள போராட்டம் மாநிலம் தழுவியதாக மாறும். இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.