பிற மொழி சினிமா: கர்நாடகத்திற்கு நோட்டீஸ்
டெல்லி:
பிற மொழி படங்களை வெளியிட 7 வார தடை விதித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பிறப்பித்த உத்தரவிற்குஉச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசிற்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
ஜெமினி பிலிம்ஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிற மொழிதிரைப்படங்களுக்கு கர்நாடக வர்த்தக சபை விதித்திருக்கும் தடை, தயாரிப்பாளர்களின் அடிப்படை உரிமையைப்பறிப்பதாகும். எனவே இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கர்நாடக வர்த்தக சபை விதித்த தடையின் எதிரொலியாக ஆந்திரா, கேரளா திரையுலகினர் கன்னட திரைப்படஉலகிற்கு ஒத்துழைப்பு தர மறுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் ஜெமினி பிலிம்ஸ் தாக்கல் செய்த மனுவில்சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கர்நாடகதிரைப்பட வர்த்தக சபையின் 7 வார தடைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டனர்.