சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி:
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான கோரிக்கையை உச்ச நீதிமன்றஅனைத்து நீதிபதிகள் குழு நிராகரித்தது.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்த வண்ணம்உள்ளனர். அண்மையில் சேலத்தில் நடந்த திமுக மாநாட்டில் கூட இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், மும்பையிலும், கொல்கத்தாவிலும் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 1999 டிசம்பர் மாதம்முதல் முறையாக உச்சநீதிமன்றம் இக் கோரிக்கையை நிராகரித்தது. அவ்வாறு உச்ச நீதிமன்றக்கிளை அமைப்பது நாட்டின்இறையாண்மைக்கும், உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது.
அதனையடுத்து 2001 ஏப்ரல் மாதம் அனைத்து நீதிபதிகள் குழு இந்தக் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்தது. அப்போது தனது முந்தையமுடிவில் மாற்றமில்லை என்று உறுதி செய்தது.
அண்மையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தலைமை நீதிபதிக்கு எழுதியகடிதத்தில், உச்சநீதிமன்றம் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்த பரிசீலித்த உச்சநீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழு, அதை ஏற்க முடியாது என்றும் முந்தைய நிலையில் இருந்து எந்த மாற்றமும்இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இத் தீர்மானம் ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications