கடமை தவறிவிட்டது அதிமுக அரசு: வைகோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆமத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணத்தைப் பெறுவதிலிருந்து தமிழக அரசு கடமை தவறி விட்டது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வறட்சி நிவாரணம் தொடர்பாக முன்கூட்டியே மத்தியஅரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்நேரம் மத்திய அரசின்வறட்சி நிவாரண நதியைப் பெற்றிருக்க முடியும்.
தமிழக அரசின் தாமதத்தால் விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளுக்குபயிர்க் கடன்களைத் தர கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்திற்கு எப்போது சட்டசபைத் தேர்தல் நடந்தாலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகமதிமுக கடுமையாக பாடுபடும் என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications