For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயக்க மருந்து செலுத்தி நகைகள் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே நெற்குன்றத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து 61 பவுன்தங்க நகைகள், ரூ. 34,000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நெற்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் பிரான்சிஸ். இவரது வீட்டுக்கு இன்று அதிகாலை வந்த ஒரு கும்பல்,தூங்கிக் கொண்டிருந்த பிரான்சிஸ் மற்றும் குடும்பத்தினர் மீது ஜன்னல் வழியாக மயக்க மருந்தை ஸ்பிரேசெய்துள்ளனர்.

இதையடுத்து அனைவரும் மயங்கினர். இதன் பின்னர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துபீரோவில் இருந்த 61 பவுன் நகைகள், ரூ. 34,000 ரொக்கம் ஆகியற்றைக் கொள்ளையடித்துக் கொண்டுதப்பியுள்ளனர்.

வீட்டில் இருந்த நாய் மீதும் அவர்கள் மயக்க மருந்தை தெளித்துள்ளனர். இதனால் நாயும் மயங்கி விழுந்துள்ளது.

வித்தியாசமான முறையில் நடந்துள்ள கொள்ளை அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X