வீரப்பன்: ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தர்மபுரி:
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தமிழக ரயில் நிலையங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் எனமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தர்மபுரி ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த மர்மக் கடிதத்தில்,
இன்னும் 35 நாட்களில் தர்மபுரி, சேலம், திருப்பூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கரூர், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில்வெடிகுண்டுகள் வெடிக்கும். மேலும் தண்டவாளங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். போலீசாரின் கண்காணிப்பையும் மீறி இந்தத்தாக்குதல்கள் நடக்கும்.
இதைத் தவிர்க்க வேண்டுமானால் வீரப்பக்ைை கொன்ற அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இப்படிக்கு, விடுதலைப்படையின்சார்பில் கோபி என்று எழுதப்பட்டுள்ளது.
இக் கடிதம் குறித்து உயர் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தர்மபுரி ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, தர்மபுரி, அரியலூர் உள்ளிட்டரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.