மன்மோகன்: கூட்டணி கட்சிகள் போட்டி போட்டு மனு
சென்னை:
சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டி போட்டுபல்வேறு கோரிக்கை மனுக்களைக் கொடுத்தன.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலைய பொன்விழா தொடக்க விழா மற்றும் புதிய அணு உலைத் திட்டத்தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை சென்னை வந்தார். பிற்பகலில்கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து விட்டு ஆளுநர் மாளிகைக்கு அவர் வந்தார்.
அப்போது காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுக்களைக்கொடுத்தன. ஒவ்வொரு கட்சியும் பல்வேறு கோரிக்கைகளை கொடுத்ததால் மன்மோகன் மலைத்துப் போனார்.
திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலாளர்துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பிரதமரை சந்தித்துகோரிக்கை மனுவைக் கொடுத்தது.
ஊட்டி இந்துஸ்தான் புகைப்படத் தொழிற்சாலையை தனியாரிடம் விடக் கூடாது, கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும், முரசொலி மாறனின் கனவான நான்குநேரி தொழிற்பூங்காவைஅமைக்க விரைவான நடவடிக்கை தேவை என பல்வேறு கோரிக்கைகளை திமுக அடுக்கியிருந்தது.
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான குழுவும் தனது பங்குக்கு பல்வேறுகோரிக்கைகளை வைத்திருந்தது. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சேது சமுத்திரம் திட்டத்தைவிரைவுபடுத்த வேண்டும், ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பலகோரிக்கைகளை அக்கட்சி வைத்திருந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பிலும் ஒரு குழு பிரதமரை சந்தித்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையிலானஅக்குழுவினர் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரைவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தது.
பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மன்மோகனை சந்தித்து மனு கொடுக்க வந்ததால் ஆளுநர்மாளிகை முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு கட்சியும் பிரதமரிடம் தங்களுக்கு உள்ளசெல்வாக்கை அடுத்தவர்களுக்கு காட்டிக் கொள்ள முயற்சித்தது பளிச்சென தெரிந்தது.












Click it and Unblock the Notifications