மீனவர் பிரச்சினை: சந்திரிகாவுடன் பேச மன்மோகன் உறுதி
சென்னை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் குறித்து இலங்கைஅதிபர் சந்திரிகாவுடன் பேசுவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னை வந்த மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலானமதிமுக குழு சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தது. அதில் ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டம், நதிகள் இணைப்பு, சேது சமுத்திரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துகூறப்பட்டிருந்தது.
மன்மோகனுடனான சந்திப்பு குறித்து பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படையினர் அடிக்கடி தொந்தரவு செய்வது குறித்து இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேசுவதாகமன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
சேது சமுத்திரம் திட்டத்தை விரைவுபடுத்தவும், மீனவர்களின் கவலை குறித்து உரிய விளக்கம் தருமாறும் பிரதமடம்கோரப்பட்டது. அதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications