அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழா ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக அதிரடிப்படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா 27ம் தேதிக்குப் பதில்30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினருக்கு தமிழக அரசின் சார்பில்ஜெயலலிதா வருகிற 27ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்திருந்தார்.
இந் நிலையில் இவ்விழா 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழாவை மிக் சிறப்பாக நடத்த முதல்வர்திட்டமிட்டுள்ளதால், குறுகிய கால அவகாசத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிப்பது சிரமம் எனஅதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதால், விழாவை 30ம் தேதி மாலை 5 மணிக்கு அரசுஒத்திவைத்துள்ளது.
இந் நிகழ்ச்சியின்போது அதிரடிப்படையினர் அனைவருக்கும் தலா ரூ. 3 லட்சம் ரொக்கம், பதவி உயர்வுக்கானஉத்தரவு, வீட்டு மனை ஒதுக்கீட்டுக்கான உத்தரவு ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில்ஆளுநர் ராம் மோகன் ராவும் கலந்து கொள்கிறார்.
கண்கவர் கலை நிகழ்ச்சிக்கும், இன்சுவை இரவு விருந்துக்கும் தமிழக அரசு அன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications