நாகையை சுரண்டும் நிறுவனம்: சிபிஎம் கண்டனம்
சென்னை:
நாகை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சுரண்டி வரும் குஜராத்தைச் சேர்ந்த உப்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் என்றநிறுவனம், 650 ஆழ்குழாய் கிணறுகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியில் எடுத்துஉபயோகப்படுத்துகிறது.
இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. விவசாயிகள் கடும்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்தியாவின் முக்கிய பறவைகள் சரணாலயமும் இதனால் வறண்டுபோகும் நிலை உருவாகியுள்ளது.
இப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, அந் நிறுவனத்தின் உப்பு உற்பத்திக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications