ரஜினி, சங்கராசாரியாருக்கு குறி வைத்த வீரப்பன்
கோவை:
நடிகர் ரஜினிகாந்தையும் காஞ்சி சங்கராச்சாரியாரையும் கடத்த சந்தன கடத்தல் வீரப்பன் திட்டமிட்டிருந்ததாகத்தெரியவந்துள்ளது.
அதிரடிப்படையின் எஸ்.பியும் வீரப்பன் வேட்டையில் முக்கிய பங்கு வகித்தவருமான செந்தாமரைக் கண்ணன்கூறியதாவது:
ராஜ்குமாரை கடத்தி கோடிக்கணக்கில் பணம் பார்த்த வீரப்பன் அதே போன்று பிரபலமான நடிகரை கடத்ததிட்டமிட்டு இருந்தான். ரஜினிகாந்த்தை கடத்தினால் கோடிக்கணக்கில் பணம் பெறலாம் என்பதும், தான் நினைத்தசில காரியங்களை சாதிக்கலாம் என்பதும் வீரப்பனின் திட்டமாக இருந்தது.
மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களுக்கும் அவன் குறி வைத்தான். பொதுவாக வீரப்பன்அமைதியாக இருந்தால் அடுத்து ஏதோ பெரிய நடவடிக்கையில் இறங்கப்போகிறான் என்று அர்த்தம். இதற்குகடந்த கால சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.
நாகப்பா கொலைக்குப் பின் வீரப்பனின் நடவடிக்கைகள் ஓய்ந்தது போல் இருந்தாலும் உள்ளுக்குள் பெரியதிட்டத்தை வைத்திருந்தான் என்றார். காஞ்சி சங்கராச்சாரியாரையும் கடத்த வீரப்பன் திட்டமிட்டிருந்ததாகவும்அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.