மாதையனை விடுவிக்க மனைவி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
13 ஆண்டுகளாக கோவை சிறையில் வாடும் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின்அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், வீரப்பனுக்கு ஈமக் காயங்கள் செய்யப்பட வேண்டும். எங்களது குடும்பத்தில் உயிருடன் உள்ளஒரே ஆண் எனது கணவர்தான். எனவே அவரை ஒரு வாரத்திற்கு பரோலில் விடுவிக்க வேண்டும். வீரப்பன் தவிரஅவனது தாய், தம்பி, மகன் ஆகியோருக்கும் ஈமக் காயங்கள் நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 13 வருடமாக மாதையன் சிறையில் வாடி வருகிறார். சிறையில் அவரது நடத்தை நன்றாக உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே அவர் பரோலில் வந்துள்ளார். எனவே அவரை தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications