For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாம்பரம்-எழும்பூர் புதிய ரயில் பாதையில் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தாம்பரம்-எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் இன்றுரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை நடத்தினார்.

தாம்பரம் முதல் எழும்பூர் வரையிலான மீட்டர்கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு ரூ. 90 கோடி செலவில்புதிதாக அகலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டநிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு இப்பாதையில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்புஆணையர் பிரணாப் குமார் சென் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முதல் கட்டமாக இன்று காலை எழும்பூரிலிருந்து கிண்டி வரை டிராலியில் சென்று அவர் ஆய்வுநடத்தினார்.

வரும் 29ம் தேதி இப் பாதையில் அதி வேக சோதனை ரயில் இயக்கிப் பார்க்கப்படவுள்ளது.

அதன் பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல் இப்பாதைகளில் ரயில்கள் போக்குவரத்து தொடங்கும்.தினசரி இரு மார்க்கத்திலும் 200 முறை பயணிகள் மின்சார ரயில் இயக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X