தலைமை செயலாளருக்கு காங்கிரஸ் கண்டனம்
சென்னை:
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நடத்தை விதிகளை மீறி செயல்படுகிறார்என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைச் செயலாளர் இந்திய நிர்வாகப் பணியின் கீழ் வருபவர். அத்தகையோர் நிர்வாகம் தவிர்த்து அரசியல்ரீதியான நிலைப்பாடுகள் எதுவும் எடுக்க முடியாது. ஆளுநர் நியமனம் குறித்து இந்தியக் குடியரசு தலைவரைகேள்வி கேட்கவும் முடியாது.
ஆனால், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பிரமாண வாக்குமூலத்தில்,எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இது உரிமை மீறலாகும்.
ஆனால் தமிழக ஆளுநரை மாற்றக் கூடாது என்று தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தை நாடியது,குடியரசுத் தலைவரின் மதிப்பையும், மரியாதையையும் இழுக்குபடுத்தும் செயலாகும். நடுநிலைமையிலிருந்துதலைமைச் செயலாளர் தவறிவிட்டார்.
மேலும் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகவும் செயல்பட்டுள்ளார். இது இந்திய அரசின் பணியாளர் நலத்துறைஅமைச்சகத்தின் நடவடிக்கைக்குரியதாகும் என்று கூறியுள்ளார்.