கருணாநிதி வீடு முற்றுகை: 200 மீனவர்கள் கைது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட புறப்பட்ட 200 மீனவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சிங்களர்களின் தூண்டுதலினாலேயே இங்குள்ளவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றுகருணாநிதி கூறியதைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனைத்து மீனவர்கள்சங்கங்கள் முடிவு செய்தன.
இன்று காலை அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ராஜா தலைமையில் 200 பேர் கடற்கரையில் காந்தி சிலைஅருகே கூடினர். பின்னர் அவர்கள் கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புறப்பட்டனர்.அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
கருணாநிதிக்கு மருத்துவ சோதனை:
கருணாநிதிக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்டது.
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதிக்குசி.டி. ஸ்கேன், தாலியம் சோதனை,எக்கோ கார்டியோகிராம், சிறுநீர் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன.
இருதய நோய் நிபுணர் தணிகாச்சலம் கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதித்தார். இதன் பின்னர், அவர்நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியதையடுத்து கருணாநிதி வீடு திரும்பினார்.
இது வழக்கமாக நடத்தப்பட்ட பரிசோதனைகள்தான் என்று கருணாநிதி குடும்பத்தார் தெரிவித்தனர்.