தென் மாவட்டங்களில் தீவிரமடைகிறது கன மழை!
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் அடுத்த 2நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு முழுவதும் தொடர்மழை பெய்தது.
இந் நிலையில் இன்றும் மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும்கன மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செமீ மழைபெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்குற்றாலத்தில் உள்ள அருவிகளில் அதிக அளவில்நீர் கொட்டி வருகிறது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது. தற்போது அணையின்நீர்மட்டம் 89 அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications