பெண் சிசுக்கொலை: தாய்க்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தமிழ்நாட்டிலேயே பெண் சிசுக்கொலை தொடர்பான வழக்கில் முதன் முறையாக ஆயுள் தண்டனை வழங்கி சேலம்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுகுணா (23).இந்த தம்பதிக்கு அம்பிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.இதனால் பிறந்து இரண்டே நாளேயான குழந்தையின் வாயில் சுகுணா எரிக்கம்பாலை ஊற்றி கொலை செய்தாள்.
இது தொடர்பாக சுகுணா மீது கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்டில் இடைப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட உயர்வு அமைதி நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் சுகுணாவிற்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications