திருவட்டார்: கட்டடம் இடிந்து 3 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
திருவட்டார்:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கட்டடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பரிதாபமாக பலியாயினர்.25 பேர் படுகாயம் அடைந்தனர்.
காட்டுக்காடு என்ற கிராமத்தில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்கூடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் கூரை இன்றுதிடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிற்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோர்இடிபாடுகளில் சிக்கினர்.
இதில் 3 பெண்கள் இடிபாடுகளில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பலியாயினர்.
தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து உள்ளே சிக்கியிருந்த 28 பேரைமீட்டனர்.
பலத்த காயமடைந்த இவர்கள் திருவட்டார் மற்றும் நாகர்கோவில் அரசு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications