For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்களுக்கு எதிராக பேசியது இல்லை: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மீனவர்களுக்கு எதிராக எப்போதும் பேசியது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களுக்கு எந்த தீமையும், தொழில் இழப்பும் ஏற்படாது என்றும், பவளப் பாறைகள் அழிக்கப்படாதுஎன்றும் அப் பகுதி மீனவர்களிடம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இத்திட்டம் நிறைவேறினால் திமுகவுக்குப் பெருமையும், புகழும் அதிகரிக்கும் என்ற பொறாமை காரணமாக சிலர் திட்டமிட்டுமுற்றுகைப் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆளுநரை மாற்றாததால்தான் பிரதமரை வரவேற்க நான் கொடைக்கானலில் இருந்து வரவில்லை என்று கூறுகிறார்கள். வந்திருந்தால்ஆளுநரை மாற்றுவதற்கு நிர்பந்திப்பதற்காகத் தான் வந்தேன் என்று சொல்லி இருப்பார்கள்.

மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவையோ, அவருடைய அரசையோகுற்றம் சொல்லவில்லை என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்னிடம் கூறினார்.

தபால் தலை வெளியீட்டில் யார் உரிமை கொண்டாடினாலும், அதை வெளியிடுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்கும் உரிமை கொண்டதுதயாநிதி மாறனை அமைச்சராகக் கொண்ட துறைதான் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.

ஜெயலலிதா அளித்த விளக்க அறிக்கையில், அப்போதிருந்த வாஜ்பாய் அரசு மருதுபாண்டியர் தபால் தலை வெளியிட வைக்கப்பட்டகோரிக்கைகளை எத்தனை முறை மறுத்துள்ளது என்பது தேதி வாரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் 350 கி.மீ. தூரம் பாதயாத்திரை செல்வதாகஅறிவித்துள்ளார். அரசின் வழியில் அவரும் செல்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X