4,000 பேர் பங்கேற்கும் அதிரடிப்படை பாராட்டு விழா
சென்னை:
சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிரடிப் படையினருக்கான பாராட்டு விழாவில் மொத்தம்4,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வீரப்பனையும், கும்பலையும் சுட்டுத் தள்ளிய தமிழக அதிரடிப் படையினருக்கு தமிழக அரசின் சார்பில் சென்னைநேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள போதிலும், அதைப் பொருட்படுத்தாமல்விழாவுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
விழாவில் அதிரடிப்படையினர் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது, வனத்துறையினர், முன்னாள் அதிரடிப்படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரும் கலந்து கொள்ள அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதிரடிப் படையைச் சேர்ந்த 764 பேர், இதற்கு முன்பு இருந்த படையில் இடம் பெற்றிருந்த 348 பேர், தற்போதையமற்றும் முன்னாள் அதிரடிப்படை வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2,975 பேர், வனத்துறையினர் 51 பேர் மற்றும்அவர்களது குடும்பத்தினர் 102 பேர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் கலந்து கொள்ள நேற்று காலை முதலே சத்தியமங்கலம், கடம்பூர், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளஅதிரடிப்படை முகாம்களில் இருந்த வீரர்கள் தங்களது சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிட்டனர். இன்று காலைமுதல் அவர்கள் குடும்பத்தினருடன் சென்னை வர ஆரம்பித்துவிட்டனர். இவர்களுக்கு தங்குவதற்கும் அரசேவசதிகள் செய்து தந்துள்ளது.
இன்று மாலைக்குள் அனைவரும் சென்னைக்கு வந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைஅதிரடிப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் இந் நிகழ்ச்சியில் மாஸ்டர் கலா தலைமையில் 40க்கும் மேற்பட்டசினிமா நடனக் கலைஞர்களின் டான்ஸ் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சைவ, அசைவ விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்வர்ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications