சிகிச்சை: பாரீஸ் கொண்டு செல்லப்படும் அராபத்
ரமலா:
மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் சிகிச்சைக்காக பாரீஸ் கொண்டுசெல்லப்படுகிறார்.
மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் சிகிச்சைக்காக பாரீஸ் கொண்டுசெல்லப்படுகிறார்.
இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டிருந்த அராபத்தின் உடல்நிலை நேற்று முன்தினம் கவலைக்கிடமானது.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
தற்போது நிற்பதற்கும், உணவு உட்கொள்வதற்கும் முடியாத நிலையில் பெரும்பாலும் அராபத் படுக்கையிலேயேஓய்வு எடுத்து வருகிறார்.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அராபத், தற்போதுசிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் ஜோர்டான்தலைநகர் அம்மானுக்கு வந்த அராபத் அங்கிருந்து பாரீஸ் கொண்டு செல்லப்படுகிறார்.
அங்கு பாரீஸ் நகருக்கு அருகிலுள்ள பெர்ஸி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications