தலித்துகள் மதமாற்றம்: 15 இஸ்லாமியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லிக்குப்பம்:

தலித்களை மதம் மாற்றியதாக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர். மனித நேய பேரவை என்றஅமைப்பைச் சேர்ந்த இவர்கள், அப் பகுதியைச் சேர்ந்த தலித்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதாகவும், மதம்மாற்றப்பட்டவர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்து வந்ததாகவும் போலீசார்கூறியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து அரிவாள்கள், கத்திகள், செல்போன்கள், அரபி புத்தகங்கள், ஆடியோ, வீடியோ கேசட்டுகள்,கேமராக்கள், டிஜிட்டல் டைரிகள், மற்றும் ரூ. 80,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம் முத்துத்தேவன் பட்டியில் இயங்கும் அறிவகம் என்ற அமைப்பின் ஒரு பிரிவு தான் இந்த மனிதநேய பேரவை என்றும், நெல்லிக்குப்பத்தில் பல மாதங்களாகவே இந்த அமைப்பினர் செயல்பட்டு வருவதாகவும்போலீசார் கூறுகின்றனர்.

வட இந்தியாவிலும், காஷ்மீரிலும் உள்ள பல அமைப்புகளுடன் தொடர்புடைய இவர்களுக்கு வெளிநாட்டில்இருந்து பணம் வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+