தமிழகத்தில் வலுக்கும் கனமழை: 3 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது.
பருவ மழையோடு, வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த மண்டலமும் உருவாகியிருப்பதால் சென்னைஉள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனத்த மற்றும் மிக கனத்த மழை பெய்யும் எனநுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் வீடு இடிந்து 3 பேர் பலி:
திருச்செந்தூரில் கன மழையால் வீடு இடிந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். கும்பகோணத்தில் ஒரு வீடுஇடிந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி, உதகை, கடலூர், வேலூர், மதுரை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாககன மழை பெய்து வருகிறது.
தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை:
தஞ்சையில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரின்முக்கியச் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் காலை முதல் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications