நோன்பு திறப்பு: பள்ளிவாசலில் விஜயகாந்த்!
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
நடிகர் விஜயகாந்த் பொள்ளாச்சி அருகே பள்ளி வாசலில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப் போவதாக அடிக்கடி கூறி வருகிறார் விஜயகாந்த். அடுத்த ஆண்டு ஏப்ரல்மாதம் 14ம் தேதி தனது அரசியல் அறிமுகம் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில், அரசியல்வாதிகளின் குண நலன்கள் பலவும் அவருக்கும் வர ஆரம்பித்துள்ளன. பொள்ளாச்சிஅருகே சேத்துமடை பகுதியில், நெறஞ்ச மனசு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சூட்டிங் முடிந்த பின்னர், மாலை 5 மணிக்கு மேல் அம்பரம்பாளையம் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றவிஜய்காந்த், அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையிலும் பங்கேற்றார்.
பின்னர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கஞ்சி குடித்தார். இதைத் தொடர்ந்து தர்காவினுள் ஏழைகள்பலருக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications