குருபூஜை: தேவர் சிலைக்கு ஜெ. மாலை
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதாஉள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்தராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவர்நினைவிடம் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்று குருபூஜை நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர்மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் சல்மான் குர்ஷித், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனுஷ்கோடி ஆதித்தன்உள்ளிட்டோர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தேவர் பேரவையைச் சேர்ந்த பெண்கள் சார்பில் தேவர் சிலைக்கு பூஜையும், பால் அபிஷேகம் நடந்தன.
கடந்த ஆண்டு திடீரென பசும்பொன் கிராமத்துக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா குருபூஜையில் கலந்து கொண்டார். இன்றுஅதிரடிப்படையினருக்கு சென்னையில் பாராட்டு விழா நடப்பதால், இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
குருபூஜையையொட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications