ஜெயலட்சுமி பேட்டியளிக்க தடையில்லை: நீதிமன்றம்
சென்னை:
பத்திரிக்கைகள், டிவிகளுக்கு பேட்டித் தரக் கூடாது என்று ஜெயலட்சுமிக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக காவல்துறை தாக்கல் செய்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
போலீஸார் மீது பாலியல், மோசடிப் புகார்களைத் தொடுத்துள்ள ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில்,பத்திரிக்கைகள், டிவிகளுக்கு பேட்டி கொடுக்க ஜெயலட்சுமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென் மண்டல காவல்துறை தலைவர்ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து ஜெயலட்சுமி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் பாலசுப்ரமணியம், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இறுதியில், தற்போது ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இதில் தலையிட தமிழக காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.எனவே இந்த மனு தேவையற்றது என்று கூறி காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
காவல்துறையினருடனான தனது குஜால் அனுபவங்களை நக்கீரனில் ஜெயட்சுமி தொடராக எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications