வீரப்பன் சமாதியில் பொதுமக்கள் வழிபாடு
மேட்டூர்:
சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதிக்கு ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து கற்பூரம், ஊதுபத்தி கொளுத்திவழிபட்டுச் செல்கின்றனர்.
கடந்த மாதம் 18ம் தேதி அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டான். அவனது உடல் மேட்டூர்அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில்இருந்து பொதுமக்கள் தினசரி வந்தவண்ணம் உள்ளனர். அதுவும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம்அதிகமாக இருக்கிறது.
மக்கள் வீரப்பனின் சமாதிக்கு மாலை அணிவித்து, கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி வழிபட்டு செல்கின்றனர்.வீரப்பன் இறந்த பின்னும் பொதுமக்கள் மத்தியில் அவனது ஹீரோ இமேஜ் சற்றும் குறையவில்லை. போலீஸாருக்குவீரப்பன் எதிரியாக இருந்தாலும் பொதுமக்களாகிய எங்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை என்பதுசமாதிக்கு வந்துபோகும் மக்களின் கருத்தாக இருக்கிறது.
வீரப்பனை உயிரோடுதான் பார்க்க முடியவில்லை. அடக்கம் செய்த இடத்தையாவது பார்க்கலாம் என்றுதான்வந்தோம் என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications