For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப் பதிவு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

கடைசி நேரத்தில் நடத்தப்பட்ட நாடு தழுவிய கருத்துக் கணிப்புகளில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் அவரை எதிர்த்துப்போட்டியிடும் ஜான் கெர்ரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது மீண்டும் உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் 156 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

சி.என்.என். நடத்திய கடைசி நேர கருத்துக் கணிப்பின்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கெர்ரியை விட குடியரசுக்கட்சியைச் சேர்ந்த புஷ்சுக்கு 2 சதவீத ஆதரவு அதிகம் உள்ளதாகவும், யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவெடுக்காதவாக்காளர்கள் 3 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாக்ஸ் நியூஸ் டிவி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பின்படி கெர்ரிக்கு புஷ்ஷைவிட 2 சதவீதம் அதிக ஆதரவுஉள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஓகியோ, புளோரிடா, பென்சில்வேனியா, மின்னசோடா, லோவா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் மிகக் கடுமையானபோட்டி நிலவுவதால், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்த 6 மாகாணங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

குறிப்பாக ஓகியோ, புளோரிடா, பென்சில்வேனியாவில் தான் போட்டி மிக மிகக் கடுமையாக உள்ளது.

கடந்த தேர்தலைவிட இந்த முறை ஏராளமான புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். வாக்குப் பதிவுஅதிகமாக இருந்தால் புஷ்சுக்கு எதிரான முடிவே ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இதற்கிடையே வாக்குப் பதிவில் மோசடி செய்ய புஷ் ஆதரவாளர்கள் முயல்வதாகவும், இதனால் நாடு முழுவதும் வாக்குப் பதிவுமையங்களைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான வீடியோ கேமராமேன்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஆஸ்கர் விருதுவென்ற திரைப்படத் தயாரிப்பாளரான மூர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X