வீரப்பனுக்கு பணிந்ததில்லை: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 1994-ம் ஆண்டு விதித்த எந்த நிபந்தனையையும் நானோ, எனது அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

1994 டிசம்பர் 3ம் தேதியில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் சிதம்பரநாதன், தலைமைக் காவலர் ராஜகோபால்,ஆசிரியர் சேகர் ராஜா ஆகியோர் வீரப்பனால் கடத்தப்பட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியரோடு பிணைக்கைதிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த பேபி வீரப்பன் என்கிற தனது கூட்டாளியைவீரப்பன் அனுப்பி இருந்தான். பிணைக் கைதிகளை மீட்க பவானி ஆற்றைக் கடந்து யாராவது வந்தால், அவர்கள்கொல்லப்படுவார்கள் என்று வீரப்பன் எச்சரித்து இருந்தான்.

வீரப்பனின் நிபந்தனைகள் எதையும் நான் ஏற்கவில்லை. எனது உத்தரவின்பேரில் வால்டர் தேவாரம், சஞ்சய் அரோரா ஆகியகாவல்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது அதே மாதம்29ம் தேதி தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் அதிரடிப்படை வீரர் துரைராஜுக்குக் கையிலும், நெஞ்சிலும் குண்டு காயம் ஏற்பட்டது. பிணைக் கைதிகளாகப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் சிறப்பு அதிரடிப் படை மீட்டது.

அதோடு, வீரப்பன் கூட்டத்தைச் சேர்ந்த ஐயன்துரை, ரங்கசாமி, கடம்பூரான் ஆகிய 3 பேரும் அதிரடிப்படையிடம் சரண்அடைந்தனர்.

பிணைக் கைதிகள் மூவரை உயிரோடு மீட்டதோடு, வீரப்பன் கூட்டாளிகளில் மூவரைச் சரணடையச் செய்த அதிரடிப்படையைப்பாராட்டி 1994 டிசம்பர் 30ம் தேதி அறிக்கை வெளியிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+