பொது அறிவில் புலி: சிறுமிக்கு கலாம் பாராட்டு
பரமக்குடி:
4 வயது சிறுமியின் நினைவாற்றல் மற்றும் பொது அறிவு திறமையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டுக்கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஞானசுதா. இவரது மகள் நர்மதா தேவி. 4 வயதாகும் நர்மதா தேவி,பரமக்குடியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே நல்ல நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்த நர்மதா தேவி தற்போது பொது அறிவில் சூரப் புலியாகதிகழ்கிறார். பொது அறிவு தொடர்பான எந்தக் கேள்விக்கும் சட்டென பதில் அளிக்கிறார் நர்மதா.
தனது மகளின் திறமை குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஞானசுதா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து நர்மதாதேவியின் திறமையைப் பாராட்டி கலாம் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், அடுத்த முறை தமிழகம் வரும்போது நர்மதா தேவியை சந்திக்க முயற்சிப்பதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்தகுடிமகளாக நர்மதா தேவி விளங்க ஆசிர்வதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பிய கலாம்:
இந் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்டின் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தானின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அபுதாபிசென்றிருந்த கலாம் இன்று இந்தியா திரும்பினார். அவருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமதுசென்றிருந்தார்.
ஷேக் சயீத்தின் மறைவுக்கு இந்திய அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.












Click it and Unblock the Notifications