இ மெயிலில் தலாக் கூறலாம்: முஸ்லீம் அமைப்பு !!!!
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
இ மெயிலில் தலாக் செய்வது சரியான முறைதான் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அகில இந்திய இத்தேகாத்-இ-மில்லத்கவுன்சில் என்ற முஸ்லீம் அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் தவ்கீர் ரஸாகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடிதம் மூலம் தலாக் சொல்வது ஷரீயத் சட்டப்படி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இப்போது இன்டர்நெட்டும், இ மெயிலும்மக்களிடையே பிரபலமாக உள்ளதால், இ மெயில் மூலம் தலாக் சொல்வது சரிதான்.
இவ்வாறு தலாக் சொல்வதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் தொலைபேசி மூலம் விளக்கம் பெறலாம். இது தொடர்பாக முஸ்லீம்தனிநபர் சட்ட வாரியம் விவாதிக்கப் போவதாக கூறியுள்ளது. இந்தப் பிரச்சினை வாரியத்தின் வரம்புக்குள் வராது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications