பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்படவுள்ளது. அதே போல சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின்விலையும் உயர்கிறது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தபோதும், கடந்த 3 மாதங்களாகபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தது மத்திய அரசு. இதற்கு மகாராஷ்டிரத்துக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கஇருந்ததும் ஒரு காரணம்.
இப்போது கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளது. இருப்பினும் விலையை உயர்த்தாமல் விட்டதால்இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
மேலும் இப்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லாததால், விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 1.50ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 1ம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இன்றுநள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ. 20ம், மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 50 காசும்உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.