மீண்டும் அதிபரானார் ஜார்ஜ் புஷ்: இந்தியா வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

புஷ்ஷும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் கெர்ரியும் தலா 254, 252 வாக்குகள் பெற்ற நிலையில், ஓகியோ மாகாணத்தின்முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் ஓகியோ மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையிலும் புஷ் முன்னிலை வகித்தார். இதையடுத்து தபால் வாக்குகள்எண்ணப்படட்டும், அதன் பின்னரே வெற்றி, தோல்வி குறித்து இறுதி செய்ய முடியும் என கெர்ரி தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், ஓகியோவில் பதிவான மொத்த வாக்குகளில் 80 சதவீதத்தை பெற்றால் கூட கெர்ரியால் வெற்றி பெற முடியாது எனத்தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஜார்ஜ் புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோல்வியை ஏற்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக புஷ்ஷே மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கத் தேர்தலில் மிகக் கடுமையான போட்டிக்கு இடையே அதிபர் வெல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறைஅல்கோருக்கும் புஷ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி, இறுதியில் புளோரிடா மாகாணத்தின் வெற்றியை வைத்து அதிபர்பதவியைப் பிடித்தார் புஷ்.

இம் முறையும் இரு வேட்பாளர்களும் சரிக்குச் சமமான வெற்றியைப் பெற்று, இறுதியில் ஓகியோ மாகாண முடிவை வைத்து புஷ்வென்றுள்ளார்.

புஷ்ஷின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளின் விலைஉச்சத்தை எட்டின. அதே நேரத்தில் சர்வதேச பெட்ரோலிய எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புஷ்ஷை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+