ஆந்திரா பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நகரி:
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீகாகுளம் சின்னபஜார் என்ற இடத்தில் பட்டாசு ஆலை உள்ளது. நேற்றிரவு இங்குள்ள குடோனில் 30-க்கும் மேற்பட்டோர்வேலை செய்து வந்தனர்.
இந் நிலையில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்தக் கட்டடம் பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் ஒரு சிறுமி உள்பட 11 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியில் இருந்த பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் 2 கி.மீ.சுற்றளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.












Click it and Unblock the Notifications