மாறன் தபால்தலை: பெரிதாக இருப்பதாக வழக்கு !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மற்ற தலைவர்களை விட, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தபால் தலை பெரிதாகவெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக தொடரப்பட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் முத்துராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரூ.5 விலையுள்ள முரசொலி மாறனின் தபால் தலை அளவில் பெரியதாக உள்ளது. மற்ற தலைவர்களின் தபால் தலையை விட இதுமிகப் பெரியதாக இருக்கிறது. பெரும்பாலான தபால் அலுவலகங்களில் இந்த தபால் தலை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற தலைவர்களின் தபால் தலைகள் வேண்டுமென்றே விற்பனை செய்யப்படுவதில்லை. முரசொலி மாறனின் மகனும், மத்தியஅமைச்சருமான தயாநிதி மாறனின் ((தபால்துறையும் இவரது கண்ட்ரோலில் தான் உள்ளது) வற்புறுத்தல் காரணமாகவே இப்படிநடக்கிறது.

எனவே தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை சொந்தக் காரணங்களுக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்ததற்காக அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்த்ராஜ் ஆகியோர், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டில்ஆதாரம் எதுவுமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+