ஆர்எஸ்எஸ் தேசிய கூட்டத்தில் அத்வானி
ஹரித்வார்:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் இன்று உத்தராஞ்சல் மாநிலம் ஹரித்வாரில்தொடங்கியது.
இதில் முன்னாள் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி பங்கேற்பதை எதிர்த்து இக் கூட்டத்தை விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்ததலைவர்கள் புறக்கணித்தனர்.
மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாகபா.ஜ.க மீண்டும் தீவிர இந்துத்துவா பாதைக்குத் திரும்ப வேண்டும் என இக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
ஆட்சியில் இருந்தபோது இந்துத்துவாவைக் கைவிட்டுவிட்டதாக அத்வானி மீது கோபத்தில் இருக்கும் விஸ்வ இந்து பரிஷத்தின்தலைவர்களான அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ். தேசியக் கூட்டத்தைபுறக்கணித்துவிட்டனர்.
அவர்களை சமாதானபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்சின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஓட்டுக்காக மட்டுமே இந்துத்துவாவைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதை பா.ஜ.க. கண்டுகொள்வதில்லை என்று விஎச்பி குற்றம்சாட்டி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்சுடன் இணைந்து பா.ஜ.கவுக்கு மாற்றாக ஒரு தனி கட்சியைத் தொடங்கலாம் என வி.எச்.பி. கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications