பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் கேசின் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரியுள்ளார்.
விலை உயர்வுக்கு காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா காட்டமானஅறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் முரசொலியில் கருணாநிதி எழுதியிருப்பதாவது:
மத்திய அரசின் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் இடதுசாரிகளும் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று கோரியுள்ளன.
நடுத்தர மக்களையும், ஏழை விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனேமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3 வருடத்துக்கு முன்பு எல்லா சலுகைத் திட்டங்களையும் வாபஸ் வாங்கிவிட்டு இப்போது ஒவ்வொன்றாய் திருப்பித் தரும்ஜெயலலிதா அரசைப் போல இல்லாமல், விலை உயர்வை உடனே மத்திய திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் குதிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வை எதிர்த்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பந்த் நடத்தும் பா.ஜ.கவும் தேசம் தழுவிய போராட்டத்துக்குதயாராகி வருகிறது. இன்று டெல்லியில் விலை உயர்வை எதிர்த்து பா.ஜ.க. நடத்திய பேரணியின் மீது போலீசார் தண்ணீரைப்பீய்ச்சியடித்ததில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் உள்பட பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவிலான கடும் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்று மத்திய அரசுஇருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள ரூ. 20,000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாததாகிவிட்டதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.