நதி நீர் விவகாரம்: ஜெ- கேரள முதல்வர் இன்று சந்திப்பு
சென்னை:
பரம்பிக்குளம்-ஆழியாறு நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் ஜெயலலிதாவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும்பேச்சு நடத்துகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கேரளாவுக்குச் சென்று அம் மாநிலஅமைச்சர்களுடன் பேசினர்.
இப்போது முதல்வர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கிறது. இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் உம்மன்சாண்டி தவிர, அம் மாநில பாசனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி (கற்பழிப்புபுகார் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னாவாகி வருவபர்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
பரம்பிக்குளம்-ஆழியாறு ஆற்று நீர் பகிர்வு பிரச்சனை தவிர, முல்லைப் பெரியார் ஆறு பிரச்சனை குறித்தும் ஜெயலலிதாவும்உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்துகின்றனர்.
அத்தோடு கேரள மாநில முஸ்லீம் லீக் பிரமுகரும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில கைதாகி சிறையில் இருப்பவருமானமதானிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும், அவரை ஜாமீனில் விட முடியுமா என்பது குறித்தும் ஜெயலலிதாவுடன் உம்மன்சாண்டி பேசுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications