ராக்கெட் வேகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வுக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விலை உயர்வையடுத்து தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர் ஆட்டோ டிரைவர்கள்.பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.19ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 2.12ம், சமையல் எரிவாயுவின் விலைசிலிண்டெருக்கு ரூ. 20 உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்டோ கட்டணங்கள் கணக்கு வழக்கில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளன. வாய்க்கு வந்த கட்டணத்தைக் கேட்டு பொதுமக்களை எரிச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். கேசில் ஓடும் ஆட்டோக்களின் கட்டணத்தைக் கூட,பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை காரணம் காட்டி உயர்த்தி வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வால் தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 103 கோடி நஷ்டம் ஏற்படும் என்றுதெரியவந்துள்ளது. இதை ஈடுகட்ட பஸ் கட்டணங்களை அரசு உயர்த்தவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications