தமிழகத்தில் கன மழை தொடர்கிறது: ரயில்கள் தாமதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் பல ரயில்கள் தாமதமாக வந்து கொண்டுள்ளன.

இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாககடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனத்த மழை பெய்யக் கூடும்.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழைபெய்துள்ளது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகளில் நீர் புகுந்துள்ளது.

ரயில்கள் தாமதம்:

ஆந்திராவில் கன மழை காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வட மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு வரும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மிகத் தாமதமாக வந்து கொண்டுள்ளன.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், லக்ளென எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்துகொண்டுள்ளன.

இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்குக் கிளம்பிச் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.இன்று மாலை 4..30க்குக் கிளம்ப வேண்டிய ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.30க்கும், மாலை 5.30க்குப் புறப்படும் வாரணாசிஎக்ஸ்பிரஸ் இரவு 10.30க்கும் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+