பெட்ரோல் விலை: 9ம் தேதி அதிமுக போராட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து வரும் 9ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்நடத்தப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகத்தில் இந்தப் போராட்டம் நடக்கிறது. அக் கட்சி வெளியிட்டுள்ள அறிகிகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு குறுகிய காலத்தில் 3 முறை பெட்ரோல், டீசல், கேஸ்விலையை உயர்த்திவிட்டது. பொது மக்கள், ஏழைகளின் நலனில் இந்த அரசுக்கு அக்கறையே இல்லை.
இந்த விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலைகளும் உயர ஆரம்பித்துவிட்டன. ஆனால், மத்திய அரசில் இடம் பெற்றுள்ளதிமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை இந்த விஷயத்தில் ஆழ்ந்த மெளனம் காத்து வருகின்றன.
அவர்களது முகத்திரையை கிழிக்கவும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் அதிமுக போராட்டத்தில் குதிக்கிறது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்டும் போராட்டம்:
இதற்கிடையே, எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் அதை வாபஸ் பெறக் கோரியும் மாநிலம் முழுவதும்போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிச் செயலாளர் நல்லகண்ணு அறிவித்துள்ளார்.