Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் கட்டடம் இடிந்து 5 தமிழர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் வணிக வளாக கட்டடப்பணியின் போது, கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில், தர்மபுரியைச் சேர்ந்த 5 கூலித்தொழிலாளிகள் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூர் ஆர்.டி.நகர்- கங்கா நகர் 5வது மெயின் ரோட்டில் சாய்மோகன் ரெட்டி என்பவர் பெரிய வணிக வளாகம் ஒன்றைகட்டி வருகிறார். இந்த கட்டடத்தில் முதல் மாடிக்கு கான்கிரீட் செண்ட்ரீங் போடும் பணி நடந்தது.

அப்போது மேல் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது.

தீயணைப்பு படை வீரர்கள் 3 லாரிகளில் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இடிபாடுகளில் சிக்கி, 5 பேர்பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+